General

அதுல்யா சீனியர் கேரில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்து வாழும் சூழலை உருவாக்கி கொடுக்கும் அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கிருஷ்ணரின் பிறந்தநாளான கோகுலாஷ்டமி புதனன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதேபோல், அதுல்யா சீனியர் கேரில் தங்கியிருக்கும் முதியோர்கள் ஒன்றிணைந்து வண்ண வண்ண கோலங்கள் இட்டு, கிருஷ்ண பகவானை அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் இட்டு, பூஜைகள் செய்து வழிபட்டனர்.

கிருஷ்ண பகவானின் பஜனை பாடல்களை பாடி, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கிருஷ்ண பகவானுக்கு படைக்கப்பட்ட பிரசாதம், இனிப்புகள் மற்றும் காரங்கள் முதியோர்களுக்கு வழங்கப்பட்டன.

அதுல்யா சீனியர் கேரில் நடைபெற்ற கோகுலாஷ்டமி கொண்டாட்டத்தின் மூலமாக அங்கு வசிப்போருக்கு தங்கள் குடும்பங்கள் மற்றும் பரந்த சமூகத்துடன் ஒன்றிணைவதற்கும், பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் மற்றும் நீடித்த நினைவுகளை உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *