CINEMA

போண்டா மணி மரணம்; சக நடிகர்கள் அஞ்சலி

உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் போண்டாமணி, அவருக்கு வயது 60.

பிரபல நகைச்சுவை நடிகரும், சின்னத்திரை நடிகருமான போண்டா மணி சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இவருக்கு சாய்ராம் (14) என்ற மகனும், சாய்மா (18) என்ற மகளும் உள்ளனர்.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் கடந்த ஓராண்டாக அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் வாரம் இருமுறை டயாலிசிஸ் சிகிச்சை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு போண்டா மணிக்கு திடிரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் குடும்பத்தினர் ஆம்புலனஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து தற்போது அவரின் உடல் அஞ்சலிக்காக பொழிச்சலூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கபட்டுள்ளது.

அவருடன் நடித்த சக நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது மறைவிற்கு நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், தன்மீது அன்பும், மரியாதையும், நட்பும் கொண்ட நல்ல மனிதர், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கு, திரையுலகினருக்கும் தனது ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *