தமிழ் செய்திகள்

சென்னை போக்குவரத்து காவலர்களின் தணியாத அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் கவின்ஸ்-இன் புதிய முயற்சி

சென்னை: கடும் வெயிலையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நமது பரபரப்பான தலைநகரின் போக்குவரத்தை சீராகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்க அயராது பணியாற்றும் சென்னை போக்குவரத்து காவலர்களின் சேவையை பாராட்டும் விதமாக, கவின்கேர் நிறுவனத்தின் முன்னணி டெய்ரி பிராண்டான கவின்ஸ் (Cavin’s), ஒரு சிறப்பு நன்றிக் கூறும் முயற்சியை இன்று முன்வைத்தது. ‘கவின்ஸ் சியர்ஸ் டிராஃபிக் ஹீரோஸ்’ (‘Cavin’s Cheers Traffic Heroes’) எனும் ஒருநாள் சிறப்பு நிகழ்வின் மூலம் சென்னை நகரம் முழுவதும் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் கடமைபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு கவின்ஸ்-ன் சத்தும் சுவையும் நிறைந்த, புத்துணர்ச்சி தரும், கவின்ஸ் பாதாம் பால் பாட்டில்களை நேரில் சென்று வழங்கியது.

இதன் அடிப்படையில், கவின்ஸ்-ன் தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோகப் பணியாளர்கள், சென்னை முழுவதும் உள்ள முக்கிய போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் சாலையோர முகாமிடங்களில் பணியாற்றும் காவலர்களை நேரில் சந்தித்து, நன்றியை தெரிவித்தனர். சென்னை கிண்டியில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், அடையாறு வட்டத்தின் உதவி காவல் ஆணையர் கோடிசெல்வன், கிண்டி போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் கவின்கேர் நிறுவனத்தின் பெவரேஜ் பிரிவு வணிகத் தலைவர் மல்லிகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கவின்ஸ் பாதாம் பாலை வழங்குவதோடு, நகர போக்குவரத்து காவல்துறையின் தினசரி கட்டுப்பாட்டு பணிகளை மேலும் சீரமைக்கவும், சாலைவழி பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தவும், பாரிகேட்களை கவின்ஸ் வழங்கியது.

இந்த முயற்சி குறித்து பேசிய கவின்கேர் நிறுவனத்தின் பெவரேஜ் பிரிவு வணிகத் தலைவர் மல்லிகேஸ்வரன், “நாம் இயங்கும் சமூகங்களுக்கு நாம் அளிக்கும் அர்த்தமுள்ள பங்களிப்பில்தான் ஒரு பிராண்டின் உண்மையான வெற்றியும் உயர்வும் அடங்கியுள்ளதென நாங்கள் ஆழமாக நம்புகிறோம். ‘கவின்ஸ் சியர்ஸ் டிராஃபிக் ஹீரோஸ்’ என்ற இந்த நிகழ்வு, வெப்பம், மழை, புயல் போன்ற எந்த தடைகளையும் பொருட்படுத்தாமல், நமது சென்னை நகரத்தை பாதுகாப்பாகவும் சீராகவும் இயங்க அயராமல் பணியாற்றும் போக்குவரத்து காவல்துறையினரின் சேவையை கௌரவிக்கும் ஒரு சிறிய முயற்சியாகும். எந்த சூழலிலும் ஓயாமல் சேவை புரியும் இவர்களது ‘விடமாட்டேன்’ என்ற மனப்பான்மை, தணியாத அர்ப்பணிப்பின் ஆழமான உணர்வை வெளிப்படுத்துகிறது. இது, மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை எப்போதும் பூர்த்தி செய்ய, உயர்தரமான தயாரிப்புகளை வழங்குவதில் கவின்ஸின் நிலையான அர்ப்பணிப்பையும் நன்கு பிரதிபலிக்கிறது. இந்த முயற்சி வெறும் நன்றி தெரிவிப்புக்கு அல்ல, அவர்கள் மீது நாங்கள் கொண்டிருக்கும் மரியாதையையும், சமூக நலனுக்கான நம்முடைய உறுதியையும் பிரதிபலிக்கும் ஒரு உறுதியான நடைமுறையாகும்”, என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *