POLITICAL

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருவொற்றியூர் தியாகராய சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் சாமி தரிசனம்

நவராத்திரியை முன்னிட்டு திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் நவராத்திரி திருவிழா துவங்கியது. இதனையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதுவை அரசின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வடிவுடையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,

பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அனைத்து பகுதிகளும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் கண்டிப்பாக அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும், எந்த வகை கொரோனா என்றாலும் பூஸ்டர் தடுப்பூசி வீரியத்தை குறைக்கும் என்றும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *