DEVOTIONAL

யானை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஏகாம்பரநாதர்

காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஏகாம்பரநாதர் உடனுறை ஸ்ரீ ஏலவார்குழலி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.

13ம் நாள் உற்சவத்தில் மின் அலங்கார யானை வாகனத்தில் எழுந்தருளியும், ஸ்ரீ ஏலவார்குழலி மின் அலங்காரத்துடன் கூடிய பவழக்கால் சப்ரங்கள் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விநாயகர், சண்டிகேஸ்வரர், முருகன், வள்ளி, தெய்வானை உடன் பின் தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தபடி வீதி உலா வந்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி முக்கிய ராஜவீதிகள் வழியாக வீதி உலா பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *