DEVOTIONAL

காஞ்சி குமரகோட்டத்தில் வெள்ளி தேரில் எழுந்தருளிய ஸ்ரீ சுப்பிரமணியர்

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளி ரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு வள்ளி தேவயானி சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருள செய்தனர்

பின்னர் தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டு மேளதாளத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *