தமிழ் செய்திகள்

ITC Mangaldeep நிறுவனத்தின் ‘கடவுளோடு மனம் திறந்து பேசுங்கள்’ என்ற விளம்பர பிரச்சாரம் வெளியீடு

சென்னை, 17 ஜூலை 2024: இந்தியாவின் முதன்மையான அகர்பத்தி பிராண்டான ITC Mangaldeep, அதன் புதிய பிரச்சாரமான ‘கடவுளை உங்கள் நெருங்கிய நம்பிக்கையாளராக ஆக்குங்கள்’ என்று விளம்பர பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளது. இது இரண்டு நெருங்கிய நம்பிக்கையாளர்களுக்கு உள்ளது போன்ற, மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த உறவை, இதயப்பூர்வமான உரையாடல்களாக விளக்குகிறது. இந்த பிரச்சாரத்தின் மூலம், Mangaldeep பிராண்ட் ஒரு புதிய நிலைப்பாட்டைத் தழுவுகிறது, இது பலவிதமான வாழ்க்கை, சடங்குகள் மற்றும் பக்தி, தெய்வீக நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் வழிகளை உள்ளடக்கியது.

‘தில் சே கரோ பாத், பகவான் கே சாத்’ நாம் கடவுளுடன் பகிர்ந்து கொள்ளும் பந்தத்தை வலுப்படுத்தும் பயணத்தைத் தொடங்குகிறது மற்றும் அவர் நமது நம்பிக்கைக்குரியவர் என்பதால் கடவுளுடன் வெளிப்படையாக இருக்க நம்மை வலியுறுத்துகிறது இந்த மகிழ்ச்சியான பிரச்சாரம் இந்த அன்பான தொடர்பை மீண்டும் உருவாக்குகிறது, கடவுளுடன் தனிப்பட்ட மற்றும் நட்பு பந்தத்தை வளர்க்கிறது.

நமது கவலைகளைப் பகிர்ந்துகொள்வது, ஆறுதல் தேடுவது, நன்றி சொல்வது மற்றும் மகிழ்ச்சியை கொண்டாடுவது போன்ற அன்றாட தொடர்புகளால் ஈர்க்கப்பட்டு, இந்த பிரச்சாரம் தெய்வீகத்துடன் நெருக்கமான தொடர்புக்கான மனித தேவையை வலியுறுத்துகிறது.

‘பக்தி மற்றும் நல்வாழ்வு உணர்வைத் தூண்டும்’ mangaldeep பிராண்ட் முன்மொழிவுடன், Mangaldeep பிரமாண்டமான மத வழிபாடுகள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் அன்றாட தருணங்களுக்கு இடையில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் இரண்டிலும் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறது.

கோவிளுக்கு செல்லும்போது Mangaldeep முக்கிய துணையாக இருந்தாலும், பயணத்தின்போதும், வீட்டிலும், பணியிடங்களிலும், அரங்கங்களிலும், கடைகளிலும், நமக்கு ‘தெய்வீக உரையாடல்’ தேவைப்படும்போது நடைபெறும் பிரார்த்தனைகளிலும் Mangaldeep முக்கிய பங்கு வகிக்கிறது.

கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் கடவுளின் புனித உறைவிடம் என்று நம்பப்பட்டாலும், இந்த பிரச்சாரத்தின் மூலம், கடவுள் எங்கும் நிறைந்தவர் என்றும், எப்போதும் நம் அன்றாட பிரார்த்தனைகளைக் கேட்க ஆவலாக இருக்கிறார் என்றும், அவர் நம் பக்கத்திலேயே இருக்கிறார் என்றும் தெரிவிக்கிறது.

பிரார்த்தனைகள் நம் அன்புக்குரியவர்களை ஒன்று சேர்க்கும் அதே வேளையில் நமது மன உறுதியை வலுப்படுத்தவும், நமது ஆன்மாவை தூய்மைப்படுத்தவும் மற்றும் தனிப்பட்ட அமைதியான சூழலை உருவாக்கவும் முடியும் என்று Mangaldeep நம்புகிறது.

இந்த ஆக்கப்பூர்வமான தகவல் தொடர்பு பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசிய ITC யின் அகர்பத்தி பிரிவின் தலைமை நிர்வாகி கௌரவ் தயாள், “மங்கள்தீப் பிராண்டின் இந்த தனித்துவமான பிரச்சாரம் கடவுளுடனான நமது தனிப்பட்ட தொடர்புகளை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம், தெய்வீகத்துடனான தொடர்புகளின் எண்ணம் வழிபாட்டுத் தலங்களுக்கு அப்பாற்பட்டது மற்றும் நமது அன்றாட வாழ்க்கை முழுவதும் தெய்வீக இருப்பை அனுபவிப்பதை உள்ளடக்கியது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். வாழ்க்கைக் காட்சிகளின் தொடர்ச்சியின் மூலம், இந்த நெருக்கமான தொடர்பு எவ்வாறு கடவுளின் சக்திக்கான ஆழ்ந்த மரியாதை உணர்வை மட்டுமல்ல, தெய்வீக தோழமை உணர்வையும் வளர்க்கிறது என்பதைக் காட்டுகிறோம்.” என்றார்.

இந்த பிரச்சாரத்தை அதன் இலக்காக இருக்கக்கூடிய மக்களுக்கு கொண்டு செல்ல, ITC Mangaldeep, ஓகில்வி இந்தியாவால் காட்சிப்படுத்தப்பட்ட புதிய விளம்பரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓகில்வி இந்தியாவின் குழும கிரியேட்டிவ் இயக்குநர் ராஜேஷ் மணி பேசுகையில், “நாம் யாருடன் மனம் விட்டுப் பேசுகிறோம்? பொதுவாக, நாம் மிகவும் நெருக்கமாக உணரும் ஒருவர். நாம் உணரக்கூடிய எளிதான தன்மையும் சௌகரியமும் உள்ளது. இந்த பிரச்சாரத்தில், நம் இதயத்தில் இருக்கும் ஒரு நபரிடம் அதாவது கடவுளிடம் பேசுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம் அவர் தான் 24X7 நண்பர், தத்துவவாதி மற்றும் வழிகாட்டி. நீங்கள் எப்படி பிரார்த்தனை செய்கிறீர்கள் அல்லது எவ்வளவு நேரம் பிரார்த்தனை செய்கிறீர்கள் என்பதுப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை, அது இதயத்திலிருந்து வரும் வரை, அவர் கேட்பார். Mangaldeep இந்த அழகான சிந்தனையை வாழ்க்கையின் பாணியில் சிறப்பாக எடுத்துரைத்து, நுணுக்கங்களை கவர்வதோடு பக்கதர்களையும் பக்தியையும் வெற்றிக்கொள்கிறது இந்தத் திரைப்படம் Mangaldeep-இன் மூலமாக இருக்கும் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் ஒரு அழகான கலவையாகும்” என்றார்.

தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்காளம், அருணாச்சல பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஜூலை 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் முதன்மையான விளம்பர வெளியீட்டிற்கு கூடுதலாக, Mangaldeep தனது நுகர்வோர் மத்தியில் இந்த புதிய நிலைப்பாட்டை மேம்படுத்துவதற்காக திட்டமிடப்பட்ட சமூக ஊடகம் மற்றும் இன்ஃப்ளூயன்ஸர் செயல்பாடுகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *