General

வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த மருது பாண்டியர்களின் வீர வரலாறு! மதுரை ஆர். முரளிதரனின் ‘மருதிருவர்’ நாட்டிய நாடகம்சென்னையில் அரங்கேற்றம்!

மதுரை ஆர். முரளிதரனின் கைவண்ணத்தில் உருவான ‘மருதிருவர்’ நாட்டிய நாடகத்தின் சென்னை அரங்கேற்றம், வரும் பிப்ரவரி 7, 2026அன்று மாலை 6 மணிக்கு, சேத்துப்பட்டில் உள்ள முத்தா வெங்கடசுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு கவிப்பேரரசு வைரமுத்து தலைமை தாங்குகிறார்.

இந்திய வரலாற்றில் அதிகம் பேசப்படாத, ஆனால் மிக முக்கியமான ஒரு அத்தியாயமான மருது பாண்டியர்களின் வீரம், பலம் வாய்ந்த வெள்ளையர்களை எதிர்க்கும் தைரியம் மற்றும் உயிர் தியாகத்தை முன்னிலைப்படுத்தும் ‘மருதிருவர்’ நாட்டிய நாடகம் இந்த மேடையின் மூலம் மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறது.

நடன உலகில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியும், தயாரிப்பாளருமான மதுரை ஆர். முரளிதரன், ஏற்கனவே ‘சாகுந்தலம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘வாயுபுத்ரா’ போன்ற பிரம்மாண்டமான படைப்புகளை வழங்கி, நாடெங்கும் அறியப்பட்டவர். வழக்கமான புராணக் கதைகளிலிருந்து விலகி, நம் மண்ணின் வரலாற்றையும், போதிய அங்கீகாரம் பெறாத வீரர்களின் வாழ்க்கை கதைகளையும் மையமாக வைத்து இந்த அற்புதமான நடன நாடகத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

‘சிவகங்கை சீமை’ மற்றும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட முரளிதரன், 18-ஆம் நூற்றாண்டில் நம் நாட்டிற்காகப் போராடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மாவீரர்களான மருது பாண்டியர்கள், ஊமைத்துரை மற்றும் வேலு நாச்சியார் ஆகியோரின் சொல்லப்படாத கதைகளை மேடையில் நாடகமாக உயிர்ப்புடன் கொண்டுவர விரும்பினார்.

பிரம்மாண்டமான இந்த நாட்டிய நாடகத்தில் 50 நடனக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். மதுரை ஆர். முரளிதரனே இதற்கு இசையமைத்துள்ளார். கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி, நாட்டுப்புற இசை மற்றும் பிராந்திய மரபுகளை ஒன்றிணைத்து ஒரு சிறப்பான இசை காவியத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த இசை-நடன நாடகத்தின் முகப்புப் பாடலை உலகப் புகழ்பெற்ற ‘புடாபெஸ்ட் ஆர்கெஸ்ட்ரா’ கலைஞர்கள் இசை வடிவில் வழங்கியிருக்கின்றனர்.

இசையையும், நடனத்தையும் இசைவுடன் ஒருங்கிணைப்பதிலும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வியப்பில் ஆழ்த்தும் காட்சி அமைப்புகளை உருவாக்குவதிலும் நிபுணர் என முரளிதரன் சிறப்பாக அறியப்படுகிறார். நேரடியாக மேடையில் வழங்கப்படும் நடனம் மற்றும் காட்சி வடிவமைப்பு மூலம் பார்வையாளர்களை 18-ஆம் நூற்றாண்டின் வரலாற்றிற்கே இந்த படைப்பு நிச்சயமாக அழைத்துச் செல்லும்.

நிகழ்ச்சி விவரங்கள்:

நிகழ்ச்சி: மருதிருவர் (நாட்டிய நாடகம்)
நாள்: பிப்ரவரி 7, 2026 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 6:00 மணி
இடம்: முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கம், சேத்துப்பட்டு, சென்னை.
டிக்கெட் முன்பதிவிற்கு: https://mdnd.in/event/Marudhiruvar_இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

Ticket link : Dance_Drama?ci=Y2kxMDE=&e=ZWlkNjcxNg==&editEvent=cXI=

கூடுதல் விவரங்களுக்கு: aalaap.concepts@gmail.com மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *