General

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கட் முன்பதிவு இன்று துவக்கம்

வருகின்ற 2024 பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இதற்காக தனியார் பேருந்து கட்டணங்களை ஒப்பிடும்போது அரசு பேருந்து கட்டணம் குறைவாக இருக்கும் காரணத்தினால் அரசு பேருந்துகளில் பயணிப்போர் அதிகம்.

இதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து சார்பாக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

2024 ஜனவரி மாதம் 14 ஆம் தேதியன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, SETC சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவினை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று துவக்கியுள்ளது.

டிக்கட்டுகளை https://www.tnstc.in/ என்கிற இணையதளத்திலோ, மொபைல் ஆப் மூலமோ அல்லது நேரிலோ முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *