General

பிரதமர் செல்லும் சாலை மார்க்கத்தில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு போலீசார் ஓத்திகை

நாளை சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் மற்றும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக நாளை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் மாலை 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன்பின்பு பிரதமர் சென்னை புதிய விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அன்று இரவு 7:45 மணிக்கு தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மைசூர் சென்று, இரவு தங்குகிறார்.

மறுநாள் காலை மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அதன் பின்பு மீண்டும் ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார்.

இதைப்போல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் தமிழகம் வருவதையொட்டி, டெல்லியில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட எஸ்.பி.ஜி வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

நாளை பிற்பகல் 2.45 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் சென்னை மற்றும் புறநகரில் 5 மணி நேரம் காரில், ஹெலிகாப்டரில் பறந்தபடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு இரவு 7:45 மணிக்கு தனி விமானத்தில், கர்நாடக மாநிலம் மைசூர் சென்று விடுகிறார்.

இதற்காக சென்னை விமான நிலையம் சென்ட்ரல் ரயில் நிலையம் மெரினா கடற்கரை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பிரதமர் கலந்து கொள்ளும் அனைத்து இடங்களும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வலையத்திற்க்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 10:05 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். காலை 9 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வருவார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை பிற்பகல் சென்னை வருகையை ஒட்டி எஸ்பிஜி போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

சென்னை பழைய விமான நிலையம் கேட் எண் 6 வழியாக புறப்படும் கான்வாய் கார்களின் அணிவகுப்பு திறப்பு விழா நடக்கவிருக்கும் சென்னை புதிய ஒருங்கிணைந்த விமான நிலையம் சென்று அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஐ.என்.எஸ் அடையாறு மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறது.

அதன் பின்பு அங்கிருந்து மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் அதன் பின்பு மீண்டும் ஐ.என்.எஸ் அடையார் வழியாக சென்னை பழைய விமான நிலையம். பின்பு அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்லாவரம் பிரதமர் விழா நடக்க இருக்கும் கிரிக்கெட் மைதானம் வருகிறது.

அதன் பின்பு அங்கிருந்து மீண்டும் சென்னை பழைய விமான நிலையம் வந்து ஒத்திகை நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *