தமிழ் செய்திகள்

மனசி மூலம் குடும்பத்துடன் இணையும் பெண்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் மனவளர்ச்சி குன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையமான ரெஹபோத் அறக்கட்டளை இயங்கி வருகிறது.

இங்கு தற்போது சுமார் 321 பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் குணமடைந்து அங்கேயே சுயதொழில் செய்து வருகின்றனர். அவர்களோடு 89 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளும் சிகிச்சை பெற்று, அங்கு இயங்கி வரும் சிறப்பு பள்ளி ஒன்றில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், ரெஹபோத் அறக்கட்டளையில் “மனசி” என்னும் புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தங்களது காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்களை அவர்களின் குடும்பத்தாருடன் சேர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கான துவக்க விழா நிகழ்வு சோமங்கலத்தில் இயங்கி வரும் ரெஹபோத் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஹைவே ரூப் நிறுவனத்தின் தலைவர் மொஹித் ஆஸ்வால், தலைமை நிர்வாக அதிகாரி தர்மேஷ் அரோரா, தொழிலக தலைவர் விஜயேந்திரா, காரிட்டாஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஜேசுதாஸ் மற்றும் ரெஹபோத் அறக்கட்டளையின் இயக்குனர் சோரைடா சாமுவேல், தேசிய ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோருக்கான மேம்பாட்டு நிறுவன (NIEPMD) இயக்குனர் அமர்நாத் ஆகியோர் கலந்துகொண்டு மனசி திட்டத்தை துவக்கி வைத்தனர்.

இதன்மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டு இங்கு சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்களை மீண்டும் அவர்களின் சொந்த மாநிலத்திற்கே கொண்டு சென்று அவர்களின் குடும்பத்தாருடன் சேர்க்கும் பணியை காரிடாஸ் இந்தியா என்னும் நிறுவனம் மேற்கொள்ளும், அதனோடு சேர்த்து அவர்களின் மன நிலையை தொடர்ந்து கண்காணித்தல், சுய தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தால் உள்ளிட்ட பணிகளை காரிடாஸ் இந்தியா நிறுவனம் கவனிக்கும். இதற்கு தேவையான நிதியை
ரூப் வி.கே ஜெயின் என்னும் அறக்கட்டளை மூலம் ஹைவே ரூப் நிறுவனம் தனது சமூக பங்களிப்பாக வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *