சிங்கார சென்னை ஸ்மார்ட் லிவிங் எக்ஸ்போ 2025
சென்னை: சிங்கார சென்னை பில்டர்ஸ் அசோசியேஷன் தனது வெள்ளிவிழாவை முன்னிட்டு, ‘சிங்கார சென்னை ஸ்மார்ட் லிவிங் எக்ஸ்போ 2025’-ஐ மிகுந்த விமர்சையாக நடத்த உள்ளது.
“இந்த கண்காட்சியில், முன்னணி ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தங்களது புதிய திட்டங்களுடன் காட்சிப்படுத்தவுள்ளனர். வீடுகள், வில்லாக்கள், அபார்ட்மெண்ட்கள் போன்ற விருப்பத்தேர்வுகள் மக்களுக்கு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
“மேலும், இன்டீரியர் வடிவமைப்புகள், ஸ்மார்ட் ஹோம் தீர்வுகள் மற்றும் வீட்டு கடனுக்கான ஆலோசனைகள் என அனைத்தும் ஒரே மேடையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.”
“இந்த எக்ஸ்போவில் வீடுகளை முன் பதிவு செய்து வாங்குவோருக்கு “லக்கி டிரா வாயிலாக.” தங்க நாணயம், இ-பைக் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும்,
“இந்த நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்சராக எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் செயல்படுகிறது.”
இது தொடர்பாக சிங்கார சென்னை பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஹனீபா பேசுகையில், பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை புரிய ஆர்வம் காட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
“ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், பல்லாவரத்தில் உள்ள ராமவடிவு கான்வென்ஷன் சென்டரில் இந்த எக்ஸ்போ நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த எக்ஸ்பொவிற்கு அனுமதி இலவசம். பார்வையாளர்களுக்கு தேவையான பிரத்யேக ஏற்பாடுகள் அனைத்தும் செய்யபட்டிருப்பதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.