CINEMA

காலணி திருவிழா 2024; நடிகை ரித்திகா சிங் துவக்கி வைப்பு

சென்னை, ஜனவரி 6, 2024: சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் ‘காலணி திருவிழா 2024’ என்னும் நிகழ்ச்சியை நடிகை ரித்திகா சிங் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்னர் மாலில் பல்வேறு கடைகளுக்கு சென்று கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் கலந்துரையாடினார்.

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நைக், ரீபோக், பூமா, அடிடாஸ், ஸ்கெச்சர்ஸ், லைப் ஸ்டைல், கிளார்க்ஸ், ஹஷ் பப்பீஸ், டீசல், ஆல்டோ, பாட்டா, ஐஎன்சி 5, மோச்சி, சார்லஸ் & கீத், பேலெஸ், மெட்ரோ, ஜாக் & ஜோன்ஸ், அர்மானி எக்ஸ்சேஞ்ச், ஆசிக்ஸ், ஷாப்பர் ஸ்டாப், தி கலெக்டிவ், எச்&எம் மற்றும் பாரெவர் உள்ளிட்ட 21 பிராண்டுகள் விற்பனைக்கு உள்ளன.

காலணி திருவிழாவையொட்டி ஜனவரி 11-ந்தேதி வரை இந்த பிராண்டுகள் 50 சதவீத வரை தள்ளிப்படியில் வாங்கலாம்.

காலணி திருவிழா 2024 துவக்கவிழா நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான நைக், பூமா, அடிடாஸ் உள்ளிட்ட பிராண்டுகளின் ஷூக்கள் மற்றும் காலணிகளை வாங்கினார்கள்.

50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு விருப்பமான காலணிகளை தேர்வு செய்து வாங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சி புது விதமான காலணிகளை அதிகம் விரும்புபவர்களுக்கும் பல்வேறு பிரீமியம் பிராண்டுகளை குறைந்த விலையில் வாங்க விரும்புபவர்களுக்கும் ஒரு சிறப்பான பிரத்யேக ஷாப்பிங் திருவிழாவாக இருக்கும் என்று பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி தெரிவித்துள்ளது.

இந்த ஷாப்பிங் திருவிழா சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் வரும் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *