General

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயத்தின் சார்பில் அன்னையர் தின விழா

சென்னை: எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் செயல்படும் தமிழ்ப்பேராயத்தின் சார்பில் அன்னையர் தின விழா வேந்தர் கலையகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. இதில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 100 தூய்மைப் பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.

வளாக நிர்வாகி இரா. அருணாச்சலம் வரவேற்புரையாற்றினார். தமிழ்ப்பேராய தலைவர் முனைவர் கரு.நாகராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் முனைவர் டி.மைதிலி மற்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் முனைவர் கே.எஸ். லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தலைவரும் தமிழ்ப்பேராய விருதாளருமான தமிழறிஞர் முனைவர் சந்திரிகா சுப்ரமண்யம் சிறப்புரை ஆற்றினார். உதவிப் பேராசிரியர் முனைவர் க.மகேஸ்வரி நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 தூய்மை பணியாளர்களுக்கும் விலை உயர்ந்த சேலைகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் தமிழ் பேராயத்தின் சார்பில் அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழ்ப்பேராயத்தின் தலைவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *