POLITICAL

100 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழை பெய்துள்ளது; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 11 லட்ச ரூபாய் நிதியையும், அதேபோல் கால் நடைகளை இழந்தவர்களுக்கு, வீடுகளை இழந்தவர்களுக்கும் நிவாரண நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நூறு ஆண்டுகளுக்கு இல்லாத வகையில் மிக அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனை மக்கள் அறிவார்கள்.

தொடர்ந்து மீட்பு பணிகளிலும், நிவாரணம் வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தமிழக மழை வெள்ளத்தை பேரிடராக அறிவிக்க மாட்டோம் என்று கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேரில் வந்து பார்வையிட்டாவது நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *