DEVOTIONAL

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவடி கோவில் புறப்பாடு உற்சவம்

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகாதசி நட்சத்திரத்தையொட்டி திருவடி கோவில் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

ஏகாதசி திருவடி கோவில் புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலைமீது இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, ரோஸ் நிற பட்டு உடுத்தி,வைர,வைடூரிய தங்க, திருவாபரணங்கள்,மல்லிகைப்பூ, பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க,வேத பாராயணம் பாடி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சன்னதி வீதியில் உள்ள திருவடி கோவிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ஸ்ரீதேவி, பூதேவியுடன், கோவில் சன்னதி வீதியில் உலா வந்த வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் கூடி வந்து தரிசனம் செய்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *