மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் வழங்கினார்
சென்னை: தின உரிமை மக்கள் இயக்கம் மற்றும் மகளிர் உரிமை கழகமும், எஸ்.எஸ். தன்னார்வ தொண்டு நிறுவனமும் மற்றும் அறக்கட்டளை ஆகியவை இணைந்து பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை மண்ணடியில் நடைபெற்றது.
15 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் கலந்துகொண்டார்.
பள்ளி மாணவர்களுக்கும், உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையினை சிறப்பு விருந்தினர் வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தின உரிமை மக்கள் இயக்க நிறுவனர் கல்பனா பாஸ்கர் தலைமையில் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்த பலர் தங்களை பகுஜன் சமாஜ் கட்சியில் இணைத்துகொண்டனர்.
தின உரிமை மக்கள் இயக்க நிறுவனர் கல்பனா பாஸ்கர், பொது செயலாளர் வழக்கறிஞர் சத்தியகுமார், தொண்டு நிறுவன தலைவர் தாமோதரன் மற்றும் மகளிர் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து நிகழ்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டலா பொறுப்பாளர்கள், பல்வேறுக்கட்சி பொறுப்பாளர்கள், தின உரிமை மக்கள் இயக்கம் மகளிர் அணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.