எலைட் வாடிக்கையாளர்களுக்காக சுந்தரம் ஃபைனான்ஸின் சுந்தரம் வெல்த்
சென்னை: சுந்தரம் பைனான்ஸ், எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் முழுமையான நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்று, இந்தியாவின் பெரிதும் மதிக்கப்படும் நிதி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், சுந்தரம் வெல்த் என்ற பெயரிலான தனது சேவையை ஒரு பிரத்யேக சொத்து மேலாண்மைச் சேவையாக விரிவுபடுத்துவதாக இன்று அறிவித்துள்ளது. இந்த முக்கிய நடவடிக்கை, இந்தியாவில் மிக உயர்ந்த நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (UHNI), உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (HNI) மற்றும் வசதி படைத்த குடும்பங்களின் அதிநவீன நிதித் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் இடத்தில் இந்நிதி நிறுவனத்தை நிலைநிறுத்தும்.
இந்த விரிவுபடுத்தப்பட்ட சேவை, சொத்து மேலாண்மையில் இந்நிறுவனம் ஏற்கனவே கொண்டிருக்கிற திறன்களையும், நிபுணத்துவத்தையும் மேலும் வலுவாக்கும்; இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட திறன்கள் வழியாக வழங்கப்படும் விரிவான நிதி தீர்வுகளில் முக்கிய நிதித் திட்டமிடல், போர்ட்ஃபோலியோ ஒதுக்கீடு மற்றும் இடர்வாய்ப்பு மேலாண்மை ஆகியவை உள்ளடங்கும்.
சந்தையின் வசதி படைத்த பிரிவுகள் மீது சிறப்பு கவனம்
சுந்தரம் வெல்த் சேவை, பாரம்பரிய முதலீட்டு திட்டங்களுக்கும் அப்பாற்பட்ட அதிநவீன செல்வ மேலாண்மை தீர்வுகள் தேவைப்படும் செல்வந்தக் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை முதன்மை இலக்காக கொண்டிருக்கும். சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் கொண்டிருக்கும் நீண்டகால வாடிக்கையாளர் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்டிருக்கும் இச்சேவை குறிப்பிடத்தக்க செல்வத்தை உருவாக்கிய செல்வந்தர்களுக்கும் மற்றும் அந்த இலக்கை நோக்கி கவனமாகவும் சீராகவும் செல்வத்தை தற்போது உருவாக்கி வருபவர்களுக்கும் சேவையாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
“சுந்தரம் வெல்த் சேவையின் எங்களது விரிவாக்க நடவடிக்கை, வாடிக்கையாளர்களுடனான எங்கள் உறவுகளின் இயற்கையான வளர்ச்சியையும் மற்றும் விரிவான நிதி தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது,” என்று சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செயலாக்க துணைத் தலைவர் ஹர்ஷா விஜி கூறினார். “பல பத்தாண்டுகளாக, ஒழுக்க கட்டுப்பாடு அடிப்படையிலான முதலீடு மற்றும் நிதித் திட்டமிடல் மூலம் பல வாடிக்கையாளர்கள், அவர்களது நிதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் நலனை மையமாகக் கொண்ட தனித்துவமான சேவை மற்றும் நேர்மையோடு பல தலைமுறை வாடிக்கையாளர்களோடு நாங்கள் கொண்டிருக்கும் நல்லுறவின் அடிப்படையில் தற்போதைய காலகட்டத்தில் உயர்நிகர மதிப்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அதிகரித்து வரும் சிக்கலான செல்வ மேலாண்மைத் தேவைகளை பூர்த்தி செய்ய எங்களுக்கு இந்த விரிவாக்கம் உதவும்,” என்று அவர் மேலும் கூறினார்.
நேர்த்தியான விநியோகத் திறனை சிறப்பாக பயன்படுத்தல்
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சுந்தரம் ஃபைனான்ஸின் நிதித் திட்டங்கள் மற்றும் சேவைகளின் அடித்தளமாக இந்நிறுவனத்தின் விநியோக வணிகப் பிரிவாக சுந்தரம் டைரக்ட் செயல்பட்டு வருகிறது. சுந்தரம் வெல்த் சேவையானது சுந்தரம் டைரக்ட்-ன் செயல்பாடுகளை மேலும் விரிவாக்கி அதிக பலன் தரும் வகையில் பயன்படுத்தும். சுந்தரம் பைனான்ஸ் குழுமம் மற்றும் மூன்றாம் தரப்பு ஆகிய இரண்டின் நிதிசார் திட்டங்களை சுந்தரம் டைரக்ட் கையாண்டு வருகிறது. இதன் மூலம் 7,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்கும் செல்வ மற்றும் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை இது உருவாக்கியுள்ளது. நன்றாக காலூன்றி இருக்கிற இந்த விநியோகக் கட்டமைப்பு, சுந்தரம் வெல்த்-க்கு விரிவான திட்ட அணுகலையும், தனித்துவமான செல்வ மேலாண்மை தீர்வுகளை வழங்குவதில் நிரூபிக்கப்பட்ட செயல்பாட்டுத் திறன்களையும் வழங்குகிறது.
இந்த செல்வ மேலாண்மை விரிவாக்கம், இந்தியாவின் வளர்ந்து வரும் அதிக வசதியான செல்வந்தர்கள் பிரிவுகளில் இடம் பெற்றிருக்கும் வசதி படைத்த புதிய வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை தனது இலக்காகக் கொண்டிருக்கும்; அதே நேரத்தில் ஏற்கனவே இருந்து வரும் இந்த விநியோக பலத்தையும் இது சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும். இந்த வளர்ச்சி உத்தியானது, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் உறவுகள் மூலம் உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் விரிவான செல்வ மேலாண்மை சேவைகளை நாடும் புதிய HNI (உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள்) மற்றும் வசதி படைத்த வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு அவர்களை தனது சேவைக்கான நபர்களாக இணைத்துக் கொள்வது ஆகிய இரண்டு குறிக்கோள்களையும் உள்ளடக்கும். அடுத்த 4 – 5 ஆண்டுகளில் 20,000 – 25,000 கோடி ரூபாய் AUM (நிர்வகிக்கப்படும் சொத்துக்கள்) என்ற இலக்கை அடைய இந்நிறுவனம் விரும்புகிறது.
“சுந்தரம் வெல்த் சேவையின் விரிவாக்கம், நடுத்தர வருவாய் கொண்ட பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் துடிப்பான பயணத்தையும் மற்றும் இந்நாட்டில் அதிகரித்து வரும் வசதி படைத்த மக்கள் பிரிவினரையும் பற்றிய எங்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது,” என்று சுந்தரம் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ராஜீவ் லோச்சன் கூறினார். “இந்த வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக சுயதொழில் செய்பவர்களுக்கு சேவை செய்வதிலும், கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக காலத்தின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் வெற்றி கண்டிருக்கிற ‘சுந்தரம் வழிமுறையை’ பயன்படுத்தி அவர்களின் வளர்ந்து வரும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். பல தலைமுறை வாடிக்கையாளர் உறவுகள், வாடிக்கையாளர்களிடம் ‘உங்களது நலனுக்கே முதல் முன்னுரிமை’ (you first) என்ற அணுகுமுறை, விரிவான திட்டங்களின் தொகுப்பு மற்றும் விவேகமான செல்வ மேலாண்மை மீது அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவற்றுடன் இந்த சந்தை பிரிவுக்கு சேவை செய்ய நாங்கள் தனித்துவமான திறன்களையும், நிபுணத்துவத்தையும் கொண்டிருக்கிறோம். வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்க கட்டுப்பாடு என்ற அம்சங்களின் அடிப்படையில் நீண்டகால நிதிப் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு செல்வ மேலாண்மை மீது நம்பகமான பங்காளராக இருப்பதே எங்கள் நோக்கம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.