General

நெல்லை – திருச்செந்தூர் ரயில் சேவை 31 ஆம் தேதி வரை ரத்து

திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே வருகின்ற 31 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் பெய்த கன மழையின் காரணமாக பெருக்கெடுத்த ஓடிய வெள்ளத்தில் பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்தன.

செய்துங்கநல்லூர் – ஸ்ரீவைகுண்டம் இடையே ரயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.

இதன் காரணமாக திருநெல்வேலி – திருச்செந்தூர், திருநெல்வேலி – தூத்துக்குடி மார்க்கங்களில் இயங்கும் முன்பதிவில்லா ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *