தமிழ் செய்திகள்

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டின் 33வது கிளை சென்னை அடையாரில் திறப்பு

சென்னை: சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் சென்னை அடையாரில் தனது 33வது புதிய ஷோரூமை இன்று திறந்துள்ளது.

இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், வர்த்தக தலைவர் சபீர் அலி, வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, மேற்கு மண்டல தலைவர் நௌசாத் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 410-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி, கரூர், செங்கல்பட்டு, கடலூர், ஒசூர், ஆகிய நகரங்களில் 33 கிளைகளை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *