CINEMA

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் “வீரா ராஜ வீரா” பாடல் நாளை வெளியீடு

இயக்குனர் மணிரத்தினம் இயக்கி, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற 28 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வரும் அக நக என்னும் பாடல் யூடியூபில் தற்போது வரை 16 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வருகின்ற மற்றொரு பாடல் குறித்த அறிவிப்பினை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது.

“வீரா ராஜ வீரா” என்னும் தொடங்கும் அந்த பாடலின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ யூடியூபில் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுளளது.

இந்த அறிவிப்பில் தோன்றும் காட்சிகளின் அடிப்படையில் இந்த பாடல் அருண்மொழிவர்மனுக்கும், வானதிக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்தும் விதமாக இயக்குனர் அமைத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *