FINANCE

ஃபெடரல் வங்கியின் புதிய அலுவலக வளாகத்தை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்

சென்னை அண்ணா சாலையில் பெடரல் வங்கியின் சென்னைக்கான பல்வேறு துறைகள் செயல்படும் வகையிலான புதிய அலுவலக வளாகத்தை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

இந்த அலுவலக வளாகத்தில் பெடரல் வங்கியின் மண்டல அலுவலகம், சேமிப்பு மற்றும் கண்காணிப்பு துறைகள், கிரெடிட் ஹப்ஸ் உள்ளிட்ட துறைகள் இயங்கும்.

பெடரல் வங்கியின் வாரியத் தலைவர் பாலகோபால், முதன்மை செயல் அதிகாரி ஷியாம் சீனிவாசன், குழுமத் தலைவர் ஹர்ஷ் துகர், முதன்மை நிதி அதிகாரி வெங்கட்ராமன் வெங்கடேஸ்வரன், மூத்த தலைவர் எக்பால் மனோஜ் ஆகியோர் முன்னிலையில் புதிய வளாகம் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது என்றும், பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அரசும் வங்கிகளும் இணைந்து செயல்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *