DEVOTIONAL

திருப்பதியில் பெண்கள் வடம் பிடித்து இழுத்த தங்கத்தேர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 32 அடி உயரம் கொண்ட தங்க ரதத்தில் எழுந்தருளினார்.

தங்க தேரினை பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துக்கு மத்தியில் மலையப்பசாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இன்று மாலை சகஸ்கர தீப அலங்கார சேவை மற்றும் இரவு அதியாயன உற்சவம் நடைபெற உள்ளது.

நாளை வைகுண்ட துவாதசியை ஒட்டி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *