கோயம்புத்தூரில் ‘பிராப்பர்டி ஃபெஸ்டிவல்’: நவீன்’ஸ் பிரீமியம் குடியிருப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
கோயம்புத்தூர்: சென்னை நகரத்தைச் சேர்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான நவீன்’ஸ், கோயம்புத்தூர் கொடிசியா வர்த்தக வளாகத்தில் மே 15 முதல் 17 வரை நடைபெறும் மாபெரும் ‘பிராப்பர்டி ஃபெஸ்டிவல்’ (வீடுகள் கண்காட்சி) நிகழ்வில் பங்கேற்று, தனது பிரீமியம் குடியிருப்புத் திட்டங்களை காட்சிப்படுத்தியுள்ளது. PF 14 என்ற அரங்கில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் உள்ள அதன் பிரத்யேக திட்டங்கள் முதலீட்டாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றன.
பெருநகரங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு இரண்டாவது வீடு வாங்கும் நோக்கில் பலர் முன்வருகின்றனர். இதனால் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்கள், உட்கட்டமைப்பு வளர்ச்சி, போக்குவரத்து வசதி மற்றும் ஐடி நிறுவனங்களின் விரிவாக்கம் காரணமாக முதலீட்டாளர்களின் முக்கியத் தேர்வாக உள்ளன.
இந்தக் கண்காட்சியில், உடனடியாக குடியேறத் தயாரான வீடுகள், ஆடம்பர வசதிகளுடன் கூடிய பிரீமியம் குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நவீன்’ஸ் நிறுவனம் காட்சிப்படுத்துகிறது. இதில், சென்னை மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள ஓம் க்ருஹா, ஆன்தியா போயட்ரி, ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 மேப்பிள், ஸ்டார்வுட் டவர்ஸ் சிடார், பேவியூ ப்ரைவ், விஜயஸ்ரீ, மயூரா கார்டன்ஸ் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வை குறித்து நவீன்’ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பொது மேலாளர் டாக்டர் ஜி. சீனிவாசன் கூறுகையில், “கோயம்புத்தூரைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் நீண்டகால நோக்குடன் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்கள். தற்போதைய சூழலில் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்கள் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன. தரமான கட்டுமானம், குறித்த நேர ஒப்படைப்பு மற்றும் நீண்டகால மதிப்பு உயர்வு ஆகிய அம்சங்களில் நாங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்,” என்றார்.
மேலும், இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு நவீன்’ஸ் விற்பனைக் குழுவுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் தென்னிந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் வளர்ச்சி மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக அறிந்து, தங்களுக்கான சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

