25 ஆண்டுகள் நிறைவு: சுந்தரம் ஃபைனான்ஸ் சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளை வெள்ளிவிழா கொண்டாட்டம்
சென்னை: சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளை, தனது சேவையின் 25-வது ஆண்டை நிறைவு செய்து வெள்ளிவிழாவைக் கொண்டாடியது. இந்த நிகழ்வில் வாடிக்கையாளர்களுடனான நீண்டகால உறவு, பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பங்களிப்பு ஆகியவை நினைவுகூரப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய சுந்தரம் ஃபைனான்ஸின் தமிழ்நாடு பிராந்தியத் தலைவரும், முதுநிலை துணைத் தலைவருமான ராஜேஷ் வெங்கட், நிறுவனத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணம் அதன் நீண்டகால செயல்பாடு மட்டுமல்ல; உண்மை, நேர்மை மற்றும் சேவை மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்ட வாடிக்கையாளர் உறவுகள்தான் என்றும் தெரிவித்தார். சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளை, அது சேவை வழங்கும் மக்களின் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தால் தொடர்ந்து வலுவாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளை, சென்னையில் நிதிச் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்து வருவதாக கிளையின் சீனியர் கிளை மேலாளர் எச். ரமேஷ் பாபு தெரிவித்தார். குறிப்பாக, பிரதான நிதி நிறுவனங்களின் சேவையை எளிதில் பெற முடியாத சிறு வணிகர்கள், முதல் முறையாக கடன் பெறுவோர், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இந்த கிளை சேவையாற்றி வருவதாக அவர் கூறினார்.
நிதி சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மை, கண்ணியம் மற்றும் மனிதநேய அணுகுமுறையின் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இந்த கிளை பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பல தலைமுறைகளாக வாடிக்கையாளர்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கும் இந்த கிளை பங்களித்து வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த கிளையின் வளர்ச்சியில் பணியாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பலர் தங்களது பணிக்காலத்தின் பெரும்பகுதியை இந்த கிளையிலேயே பணியாற்றியுள்ளதுடன், வாடிக்கையாளர்களுடன் பரஸ்பர மரியாதை மற்றும் நீண்டகால நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உறவை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக, பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். அவர்களது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ராஜேஷ் வெங்கட் தனிப்பட்ட முறையில் கையொப்பமிட்ட பாராட்டுக் கடிதங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன.
2029-ஆம் ஆண்டு சுந்தரம் ஃபைனான்ஸ் தனது 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளையின் இந்த 25-வது ஆண்டு விழா, நிறுவனத்தின் நேர்மை, பொறுப்பான சேவை மற்றும் சமூக அக்கறை ஆகிய அடிப்படை கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

