CINEMA

மௌனம் பேசியதே – சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த அமீர்

மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி இன்றுடன் (13/12/23) 21 ஆண்டுகள் நிறைந்தவடைந்துள்ளது.

இதுதொடர்பாக அத்திரைப்படத்தின் இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சினிமா கனவோடு சென்னை நோக்கி வந்தவர்கள் அனைவரும் வெற்றிகண்டதில்லை.

நானும் அப்படிதான் சென்னை வந்தேன். என்னுடைய திரைக்கனவை மௌனம் பேசியதே படத்தின் மூலம் நிறைவேற்றினேன்.

அதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பு நிறுவனத்தாருக்கும், நடிகர் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அத்தோடு கடந்த ஒரு மாத காலமாக தன்மீது தூவப்பட்டு வரும் அவதூறு கருத்துக்களுக்கு, தன்னுடன் பக்கபலமாக இருந்துவரும் தமிழக ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *